SMF - Just Installed!

Recent posts

#61
18.04.2025:

STAR HITS:

💞SAINDHAVI💞

#62
17.04.2025:

STAR HITS:

💞KARTHIK(SINGER)💞


#63
ஒரு நாய் அதை வளர்க்கும்
பெண்ணுக்கு மிகவும்
விசுவாசமாக இருக்கிறது,
அவள் தன் குழந்தையை
அதனுடன்
விட்டுவிட்டு பல வேளைகளில்
வெளியில் செல்கிறாள்.

 நாயுடன்  உறங்கும்
குழந்தையை
அவள் எப்போதும்
கண்டு கொள்வதில்லை.
அவளும் நாயை நம்பினால்
ஆனால்,

ஒரு நாள் மிகவும் சோகமான
சம்பவம்
ஒன்று நடந்தது.

 வழக்கம் போல் அந்த பெண்
இந்த விசுவாசமான நாயை வீட்டில்
குழந்தையுடன் விட்டு விட்டு
கடைக்கு சென்றார்.

 அவள் திரும்பி வந்தபோது, ��
ஒரு பயமுறுத்தும் காட்சியைக்
கண்டாள்,
அது அவளுக்கு ஒரு
முழுமையான
குழப்பமாக இருந்தது.

குழந்தை தன் தொட்டிலில்
இல்லை அதன் சூப்பி
போத்தல் அதை உடைந்து
அதை
சுற்றியிருந்த துணி துண்டு,
துண்டாக
கிடந்தது மேலும்
படுக்கையறை முழுவதும்
இரத்தம் படிந்திருந்தது.

அதிர்ச்சியடைந்த பெண்,
பயந்து தனது குழந்தையைத்
தேடிக் கொண்டிருந்தார்.

 திடீரென்று, அந்த விசுவாசமான
நாயை
கண்டாள்  அது தன் சுவையான
உணவை முடித்தது போல் இரத்தம்
தோய்ந்த
தன் வாயை நக்குவதைக்
கண்டாள்.

 நாய் தனது குழந்தையை
சாப்பிட்டதை
பெண் உறுதி செய்து கொண்டாள்.

 அதிகம் யோசிக்காமல் தன்
குழந்தையை ருசித்த நாயை
கட்டையால் அடித்தாள்
நாய் செத்து மடிந்தது.

 பின்னர் அவர் தனது
குழந்தையின்
உடலின் பாகங்களைத் தேடினாள்.

அப்போது கட்டிலின் கீழ்
ஒரு மூலையில் குழந்தை
படுத்துக்கொண்டு
வேடிக்கை பார்த்தவாறு
இருந்ததையும்
அதன் மறு புறம் பாம்பு
ஒன்று
கிழிந்த நிலையில் கிடந்ததையும்
அந்த பெண் கண்டார்.

அங்கு  பாம்புக்கும் நாய்க்கும்
கடும் சண்டை
கொடூரமான பாம்பிடம்
இருந்து குழந்தையை
காப்பாற்ற நாய் போராடியதையும்
அவள் அதை புரிய நேரமாகியது.

ஏனென்றால் அவள்
தனக்கு வந்த கோபத்தாலும்,
நிதானமற்ற
தன்மையாலும்
விசுவாசமான நாயைக்
கொன்றாள்.

இனி அவள் கண்ணீர்
விடுவதை அந்த விசுவாசமான
நாய் அறியப்போவதில்லை.

 அது போல் உண்மையை
சரிவர அறியாமல் எத்தனை
முறை கடுமையான
வார்த்தைகளால்
மற்றவரை தூற்றுகின்றனர் மற்றும்
அவர்களைப் பற்றி
பொய்களைப் பரப்புகின்றனர்.

வீண் பழி சுமத்தி அடுத்தவரிடம்
காட்டிக்கொடுக்கின்றனர்.

 "சூழ்நிலையை அணுகுவதற்கு
எப்பொழுதும் பொறுமையாக
இருப்பதே சிறந்தது."

 மேலும் தீர விசாரிக்காது
சில விடயங்களை அவசரப்பட்டு
நம்புதலும் கூடாது.

நன்றி.💐
#64
இரண்டே வார்த்தையால் கணவனை பைத்தியமாக்கி அனுப்பிய பாசக்கார மனைவி..!

மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.

மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.
கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.



இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.
#65
புளியோதரை

வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
புளி - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 15 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
கடலை பருப்பு - ஒரு பிடி
உளுந்து - ஒரு பிடி
வேர்க்கடலை - ஒரு பிடி
கடுகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா, எள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
முதலில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியை அதிக நீர் விடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, வேர்கடலை, உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

ஒரு தேக்கரண்டி கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

பாதியளவு காய்ந்த மிளகாய், எள் சேர்த்து நிறம் மாறாமல் வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும். ஆறிய பொருட்களை கொரகொரப்பாக அரைத்து பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பை குறைத்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சற்று கெட்டியானதும் பொடித்த பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான புளியோதரை செய்ய புளிக்காய்ச்சல் ரெடி.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான புளியோதரை தயார்
#66
16.04.2025:

STAR HITS:

💞SHREYA GHOSHAL💞


#67
உலகின் அனைத்து தமிழர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
#68

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
WISH YOU ALL A HAPPY TAMIL NEW YEAR




#69
15.04.2025:

STAR HITS:

💞SID SRIRAM💞

#70
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
HAPPY TAMIL NEW YEAR